Powered By Blogger

Tuesday, April 28, 2015

ரயில் பயணங்களில்...

ரயில் பயணங்களில்......
நெடுந்தூரத்  தொடர் வண்டிப் பயணம்
அடுத்தநாள் வரை ஆனந்த சயனம்
இச்சையூட்டும் குழந்தைகளுடன் இனிய அரட்டை
இம்சையூட்டும் பக்கத்து இருக்கைக்காரரின் குறட்டை
முன்பதிவு அட்டையில் மங்கைபெயர் தேடல்
பின்கதவைத் திறந்தால் பணியாளரின் சாடல்
படியில் அமர்ந்து பாலத்தைக் கடக்கும் சுகம்
நொடியில் கடக்கும் 'நில்லாத நடைமேடை' முகம்
பெயர்தெரியா ஊர்களின் வனப்பைக் காட்டும் சாளரம்
அயர்வறியாது குதித்தோடி ரசிக்கும் மனமென்னும் வானரம்
தனிருசி கொண்ட தொடர்வண்டி உணவு
பனிக்கூழ் உண்ணக்கூட தேவை  தினவு
விரைவாகச் செல்ல உதவும் விமானம்
தருவதில்லை இத்தனை இனிய வெகுமானம்!!