பெங்களூர் நாட்கள்!! (Bangalore Days!!)
மடிப்பு கலையாத சட்டை
மார்போடு அடையாள அட்டை
வீதியில் கால்வைத்தால் ஏறி மிதிக்கும் வாகன நெரிசல்
வீட்டுக்கு வந்து கண்ணாடி பார்த்தால் முகமெல்லாம் கரிசல்
யாரென்று தெரியாத எதிர் வீட்டு மாந்தர்
'பார்'என்று உரக்கச் சொல்லும் தாராளமய மாதர் ;)
வாரநாட்களில் மேலாளரிடம் முதல்தர வேசம்
வார இறுதியில் காடு, மலைகளில் பிரவேசம்
அடுப்பங்கரையில் சாராயம் காய்ச்சும் ப்ரூ 'பப்'கள்
துடுப்பில்லாப் படகாய் சுற்றும் வயதினரின் 'பில்ட்-அப்'கள்
கோடையிலும் விடாது குளிர்விக்கும் வருண பகவான்
சோடை போகாத வானிலையில் மலைகளுக்கு சகவான்
பலவித மணம்கொண்ட மலர்களின் மாலை
பல ஊர் மக்களின் கலகலப்பான சோலை!!
No comments:
Post a Comment