Powered By Blogger

Tuesday, August 31, 2010

பழமை மாறா புதுமைப்பெண்

பழமை மாறாப் புதுமைப் பெண்!
(2006)

அன்று பாரதி கண்ட கனவு
இன்றைய பெண்களின் வாழ்வு!
திடமான மன உறுதியைப் பெற்றபோதிலும்
தடம்மாறாது அதைப் பின்பற்றுபவர்!
ஆண்மக்கள் நிகராய் உரிமை பெற்றும்
தொன்மக்கள் வாய்ச்சொற்கள் மறவாதவர்!

இன்பம் துன்பம் இரண்டிலுமே
இறைவனைக் காணும் ஞானியர்போல்
இல்வாழ்கையில் நேரும் துயரங்களை
இன்முகத்தோடு ஏற்கும் நல்மனத்தவர்!
அத்துயரம் எல்லை மீறும்போது
சத்தியம் தவறாது எதிர்ப்பவர்!

மேற்கத்திய நாகரிகமென்னும் நஞ்சு தன்னை
நசுக்க முனைந்த போதிலும்
மாசுநீக்கும் எண்ணதோடு அக்கொடிய
அசுரனை திடமனத்தோடு அழிப்பவர்!

ஆலையிலும் கல்விச்சாலையிலும் பணிபுரிந்தாலும்
சேலையையெத் தன் உடையெனக் கொண்டவர்!
மிளிரும் பொன்னகையோடும்
ஒளிரும் புன்னகையோடும் காட்சிதருபவர்!

கண் இமைக்கவும் பொழுது இல்லாது
பணி செய்யும் பெண் ஆயினும்
தன் பிள்ளைக்குத் தானே சோறூட்டும்
கனிவான மனங்கொண்டவர்!

அவரே
பாரதி கண்ட புதுமைப் பெண்!
பழமை மாறா புதுமைப் பெண்!





No comments:

Post a Comment