சிறந்தது எது?
(2006)
(2006)
பற்றி எரியும் தீப்பந்தத்தைக் காட்டிலும்
கணத்தில் அணையும் தீக்குச்சியே மேல்,
ஏனெனில் தீப்பந்தத்தால் எவரும் விளக்கேற்றுவதில்லை!
பரந்து விரிந்த கடலைக் காட்டிலும்
கரை தாண்டாதிருக்கும் குளமே மேல்,
ஏனெனில் நாளும் இறைவனைக் கடல்கள் தரிசிப்பதில்லை!
உயரே பறக்கும் பருந்தைக் காட்டிலும்
தரையில் ஆடும் மயிலே மேல்,
ஏனெனில் அழகும் நளினமும் பருந்துகளுக்கில்லை!
கனத்திருக்கும் கருங்கல்லைக் காட்டிலும்
சிறுத்திருக்கும் மணலே மேல்,
ஏனெனில் கல்லில் செடிகள் துளிர்ப்பதில்லை!
பணியாட்கள் சூழ்ந்த மாளிகையைக் காட்டிலும்
மண்ணால் ஆன குடிசையே மேல்
ஏனெனில் அன்பும் அரவணைப்பும் வேலையாளிடம் கிடைப்பதில்லை!
சிறுதுரும்பும் பல்குத்த உதவ மானிடராம்
நாம் சோம்பித் திரிவதெதற்கு?
உறுதியை மனதில் கொண்டால் வாழ்வில்
உயரலாம் - போராடுவோம் அதற்கு!!
No comments:
Post a Comment