Powered By Blogger

Tuesday, August 31, 2010

அன்னை பாரதம்

ஆதலினால் காதல் செய்வோம் அன்னை பாரதத்தை!
(09.09.2007)

விண்ணும் மண்ணும் இணைவதில்லை
கண்ணும் இமையும் பிரிவதில்லை
பண்ணும் இசையும் கசப்பதில்லை
இது
இயற்கையின் நியதி!
தேசங்கள் பாரில் பலவிருந்தாலும்
பாசத்தில் நிலைபெற்று உயர்ந்தது பாரதம்
இது
நம் நாட்டு மக்களின் மதி!
ஆதலினால் காதல் செய்வோம் அன்னை பாரதத்தை!

சாதிகளும் மதங்களும் பலவிருந்தாலும்
நீதியும் தர்மமும் நிலைபெற்ற நாடு!
அறத்தையும் ஞானத்தையும் உலகுக்கு போதித்த
புத்தபிரானும் காந்திமகானும் பிறந்த பொன்னாடு!
பாரதத்தாயின் தவப்புதல்வர்க்கள் யாவரும்
ஒன்றாய் வாழும் வீடு!
பலநாட்டுப் பறவைகளும் சேர்ந்தாலும்
சலசலப்பின்றி வாழும் கூடு!
ஆதலினால் காதல் செய்வோம் அன்னை பாரதத்தை!

வீரம், ஈரம், ஞானம் மூன்றும்
இந்தியர்களின் உயிர்ப்பாய்த் தோன்றும்!
உலகுக்கு அஹிம்சையை மீண்டும்
நாமே உணர்த்திடல் வேண்டும்!
வற்றாத நதிகளும், எட்டாத சிகரங்களும்,
குன்றாத மழையும், அருவிப் பொழிவும்,
மடந்தையர் விரும்பும் பொன்னும்
மண்ணில் விளையும் மணியும்
மானுடம் பேணும் மேன்மைத்
தொழிலாம் உழவும், பிறவும்
பாரத அன்னையின் குன்றா அணிகளாம்!
ஆதலினால் காதல் செய்வோம் அன்னை பாரதத்தை!

தென்முனைக் குமரியில் அலைகள் கொந்தளிக்க
தன்மனந் கசிந்து யாவரும் உதவ
கூர்ச்சரத்தில் (குஜராத்) பூகம்பம் வந்தால்
பார்க்குமிடமெல்லாம் உதவிக் கரங்கள்!!
பலவித மணம்கொண்ட மலர்களின் மாலை
ஒரே மனம்கொண்ட மக்களின் சோலை
முன்னேற்றப் பாதையில் இந்தியாவின் காலை
அடிவைக்க உழைப்பதே நம்முடைய வேலை!
ஆதலினால் காதல் செய்வோம் அன்னை பாரதத்தை!

ஏற்றம் என்பது உள்ளதெனில்
மறுபுறம் தாழ்வும் இருந்திடுமே!
ஏமாற்றம் மட்டுமே சந்தித்து
ஏழ்மையில் உழலும் மானிடரும்
பாரதத்தில் உள்ளனரே!
அம்மக்களின் வாழ்வும் உயர்ந்திட
பாரத அன்னையின் தவப்புதல்வனே!
இந்தியாவை முன்னேற்ற வீறுகொண்டு எழு!
தாய்நாட்டை நாளும் பற்றுகொண்டு தொழு!

2 comments: